search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக முதல்வர் குமாரசாமி"

    கர்நாடக மாநிலத்தில் இன்று முதல்வருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ITRaidsKarnataka
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் 11ம் தேதி முடிவடைந்தது. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹசன், மாண்டியா ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தொடர்புடைய நபர்கள், முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளின் இந்த சோதனை நடந்தது. பல்வேறு தொழிலதிபர்கள் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



    ரியல் எஸ்டேட், கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சா மில் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தலும், 23-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ITRaidsKarnataka
    கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாத என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #cmkumaraswamy #cauveryissue #karnatakafarmers
    பெங்களூரு:
     
    காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    இந்த நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக  முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:- “கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது. கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் அதை பார்த்துக்கொள்ள தயார். தீர்ப்பாயம் கூறிய படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதை அமல்படுத்தியுள்ளோம்” 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.  #cmkumaraswamy #cauveryissue #karnatakafarmers
    பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை தன்னை யாராலும் அசைக்க முடியாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy #KarnatakaCoalitionGovt #CongressJDS
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இந்த கூட்டணி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் அதிருப்தியில் இருப்பதால் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி பேசியதாவது:-

    மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஸ்திரத்தன்மையுடன் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு வருடத்திற்கு என்னை யாராலும் அசைக்க முடியாது என்பது எனக்கு தெரியும். குறைந்தபட்சம் ஒரு வருடம், அதாவது மக்களவைத் தேர்தல் முடியும் வரையில் இந்த பதவியில் இருப்பேன். அதுவரையில் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. 

    என்னுடைய பதவிக்காலத்தில் மாநில நலன்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவேன். இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க மாட்டேன். அனைத்து கோணங்களிலும் மாநில முன்னேற்றம் முக்கியம் என்பதால், நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kumaraswamy #KarnatakaCoalitionGovt #CongressJDS
    கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். #KarnatakaCMKumaraswamy #PMModi

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுத்த ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

    காங்கிரஸ் ஜே.டி.எஸ். இடையே இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காங்கிரசார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நாளை சந்தித்துப் பேசுகிறார்கள்.

    இதற்கிடையே முதல்- மந்திரி குமாரசாமியும் நாளை டெல்லி செல்கிறார். காலை 11.30 மணிக்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பிரதமர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பிரதமர் மோடியை குமாரசாமி சந்திப்பது தொடர்பான தகவலை பெங்களூரில் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.


    பிரதமருடனான சந்திப்பின் போது கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்துகிறார்.

    தொடர்ந்து மத்திய எரி சக்தி துறை மந்திரி பியூஸ் கோயலை குமாரசாமி சந்திக்கிறார். கர்நாடகத்தில் தற்போது கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க தேவையான ஆலோசனை நடத்துகிறார்.

    காங்கிரஸ் தலைவர்கள் ராகுலைசந்திக்கும் நிலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றதுமே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMKumaraswamy #PMModi

    ×